தமிழகத்தில் 1000 வக்கீல்களின் அங்கீகாரம் பறிபோகும் அபாயம்!

இதுகுறித்து பார் கவுன்சில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், கிட்டத்தட்ட 1000 வக்கீல்கள், முறையாக முதுநிலைப் படிப்பை படிக்காமல், திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளனர். பின்னர் வக்கீலுக்குப் படித்துள்ளனர். இப்படிப்பட்ட வக்கீல்கள் தங்களது வக்கீல் பதிவு சான்றிதழை திரும்பத் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் வக்கீல் பதிவும் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என்றார்.
இதுதவிர திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலை டிகிரி முடித்து விட்டு வக்கீலுக்குப் படித்த வக்கீல்களை அடையாளம் காணும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.
இவர்களில் சிலருக்கு வக்கீல் பதிவை ரத்து செய்வது தொடர்பான கடிதமும் அனுப்பப்பட்டு விட்டதாம்.
அடிப்படை பட்டப்படிப்பை முடிக்காமல், திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் முது நிலைப் படிப்பை முடித்தவர்கள் பி.எல். படித்திருந்தால், அவர்கள் வக்கீல் பணியாற்ற முடியாது என்று கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
12 ஆண்டு பள்ளிப் படிப்பு, அடிப்படை பட்டப் படிப்பு ஆகியவற்றை முறையாக படித்தவர்கள் மட்டுமே பி.எல். முடித்திருந்தால் வக்கீலாகப் பணியாற்ற முடியும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பான அப்பீல் மனுக்களை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்பை முடித்து விட்டு வக்கீலாகப் பணியாற்றுவோரின் பதிவை ரத்து செய்யும் பணியில் பார் கவுன்சில் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications