டெல்லியில் மீனவர் போராட்டம் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ள மீன்பிடி சட்டமசோதாவை கண்டித்து டெல்லியில் நடத்த திட்டமிட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தெரிவித்தார்.

கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பாக பல்வேறு கடுமையான நிபந்தணைகள் மற்றும் தண்டனைகள் கொண்ட சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டிருந்தது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எழுந்தது. குறிப்பாக இலங்கைக்கு அருகே உள்ள தமிழகத்தில் இந்த மசோதாவுக்கு தமிழக மீனவர்கள் இடையே கடும் எதி்ர்ப்பு எழுந்தது.

கடலோர மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இதுபற்றி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அதுவரை இம்முயற்சியை நிறுத்திவைக்குமாறும் மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.

மீன்பிடி ஒழுங்கு முறை மசோதாவை, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையே இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 17ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த தமிழ்நாடு மீனவர் பேரவை திட்டமிட்டிருந்தது.

மத்திய அரசின் முடிவால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மீனவர் பேரவை அறிவித்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் கூறுகையில்,

'போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடக்கவுள்ள மத்திய பட்ஜெட் கூட்டத்திற்கு பின்பு, அந்த சட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும். மீனவ கிராமங்களிடையே பிரிவினையை தூண்டுபவர்களின் சதிக்கு மீனவர்கள் ஆளாகக் கூடாது' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+