மலேசியாவில் கொத்தடிமைகளாய் 14 வேலூர் இளைஞர்கள்!

Subscribe to Oneindia Tamil

Malaysia
வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 இளைஞர்கள் மலேசியாவில் கொத்தடிமைகளாக சித்திரவதையை சந்தித்து வருகின்றனர். இவர்களிடம் பெண் பணம் பெற்றுக் கொண்டு மோசடி வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைத்த ஏஜென்ட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி (55) என்பவர் அம்பல்லூர் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் கருணாகரன் உள்ளிட்ட இரண்டு வெளிநாட்டு வேலை வாங்கித் தரும் ஏஜென்டுகள் தனது மகன் உள்ளிட்ட 14 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு 14 இளைஞர்களும் கொத்தடிமைகளைக சித்திரவதைக்குள்ளாகி வருகின்றனர். கருணாகரன் உள்ளிட்ட இரு ஏஜென்டுகளையும் கைது செய்து 14 இளைஞர்களையும் மீட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் கருணாகரனைக் கைது செய்தனர். அவரது கூட்டாளியைத் தேடி வருகின்றனர்.

மாவட்ட எஸ்.பி. அருள்செல்வன் இதுகுறித்துக் கூறுகையில், ஒவ்வொரு இளைஞரும் ரூ. 2 லட்சம் பணத்தை கருணாகரன் உள்ளிட்ட இரண்டு ஏஜென்டுகளிடமும் கொடுத்துள்ளனர். நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து இவர்களை மலேசியாவுக்கு அனுப்பி வைத்து மோசடி செய்துள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+