For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் புலிகள் போர் தொடுப்பார்கள்- எனவேதான் இலங்கை படைகளை பெருக்கி வருகிறது: நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்​சா​வூர்:​ பிர​பா​க ரன் உயி​ரோ​டு​தான் இருக்​கி​றார்.​​ மீண்டும் விடு​த​லைப் புலி​கள் போர் தொடுப்​பார்​கள் என்று இலங்கை கரு​து​கி​றது.​ அது​தான் உண்​மை​யும்​கூட.​ இதனால்தான் தனது ராணுவ பலத்தை பெருக்கி வருகிறது என்று கூறியுள்ளார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்.

தஞ்​சா​வூ​ரில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்ற உல​கத் தமி​ழர் பேர​மைப்பு 7-வது ஆண்டு நிறைவு விழா,​​ ஈழத் தமி​ழர் வாழ்​வு​ரி​மைக்​கான உல​கத் தமி​ழர் மாநாட்​டின் நிறை​வாக நெடுமாறன் பேசியதாவது:​

இந்திரா- எம்.ஜி.ஆருக்குப் பின் மாறிய சூழல்

இந்​தி​யா​வின் பிர​த​ம​ராக இந்​திரா காந்​தி​யும்,​​ தமி​ழக முதல்​வ​ராக எம்.ஜி.ஆரும் இருந்த போது விடு​த​லைப் புலி​க​ளுக்கு வேண்​டு​ம​ள​வுக்கு உத​வி​கள் செய்​யப்​பட்​டன.​ ஈழத் தமி​ழர்​கள் மீது அவர்​கள் அக்​கறை கொண்​டி​ருந்​த​னர்.​ ஈழப் போராட்​டத்​துக்கு எம்​ஜி​ஆர் பேரு​தவி செய்​தார்.​ ஆனால்,​​ இவர்​கள் மறை​வுக்​குப் பிறகு சூழல் மாறி​யது.​

தமிழ​கத்​தில் பிர​பா​க​ர​னைக் கொல்ல "ரா' அமைப்பு சதித் திட்​டம் தீட்​டி​யது.​ இலங்​கை​யில் தமி​ழர்​க​ளுக்கு தனி நாடு அமைந்​தால்,​​ இந்​தி​யா​வில் பல்​வேறு இன​வா​ரி​யாக தேசி​யப் பிரி​வு​கள் ஏற்​பட்டு விடும் என்று அஞ்​சி​தான்,​​ தனி ஈழத்​துக்கு இந்​தியா எதிர்ப்​புத் தெரி​வித்​தது என்று கரு​து​கி​றேன்.​

ஈழப் போருக்​காக சாதா​ரண ஈழத் தமி​ழன் செய்த தியா​கங்​களை பிர​பா​க​ர​னின் குடும்​ப​மும் செய்​துள்​ளது.​ அத​னால்​தான் பிர​பா​க​ரனை மாபெ​ரும் தலை​வ​ராக அவர்​கள் கரு​து​கின்​ற​னர்.​

1980-ல் இலங்கை ராணு​வத்​தில் 40,000 வீரர்​கள்​தான் இருந்​த​னர்.​ ஈழப் போர் உச்​சக்​கட்​டத்தை எட்​டிய போது,​​ 2 லட்​சம் வீரர்​கள் இலங்கை ராணு​வத்​தில் இருந்​த​னர்.​ போர் முடிந்த நிலை​யில்,​​ தற்​போது மீண்​டும் ஒரு லட்​சம் வீரர்​களை இலங்கை அரசு ராணு​வத்​தில் சேர்த்​துள்​ளது.​

எதி​ரி​க​ளை​விட கொடி​ய​வர்​கள் துரோ​கி​கள்​தான்.​ ஈழப் போரில் தமி​ழி​னத் துரோ​கம் செய்​த​வர்​களை உல​கத் தமி​ழர்​கள் அனை​வ​ரும் அடை​யா​ளம் காண வேண்​டும்.​ அவர்​களை மறந்​து​வி​டக் கூடாது என்​றார்.

விழா​வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லகண்ணுவுக்கு உலகப் பெருந்தமிழர் விருது அளிக்கப்பட்டது.

பின்னர் நல்லகண்ணு பேசுகையில், ஆயி​ரக்​க​ணக்​கான மக்​களை கொன்று குவித்த கார​ணத்​துக்​காக முசோ​லி​னி​யின் கைக​ளைப் பற்​றிக் குலுக்​கு​வ​தற்கு மறுத்​த​வர் நேரு.​ ஆனால்,​​ இன்​றைக்கு இந்​தி​யா​வில் உள்ள காங்​கி​ரஸ் தலைமை அதற்கு நேர் தலை​கீ​ழாக இருக்​கி​றது.​

தமி​ழ​கத்​தில் உள்ள தமி​ழர்​கள் கோரிக்கை வைப்​ப​தற்கு முன்​ன​தாக,​​ ஈழத்​தைச் சேர்ந்த விபு​லா​னந்த அடி​கள்,​​ பார​திக்கு விழா எடுக்​கப் பரிந்​து​ரைத்​தார்.​ தமி​ழி​னம் மீது தணி​யாத அக்​கறை கொண்​டி​ருந்த ஈழத் தமி​ழர்​கள் இன்று இனப் படு​கொ​லைக்கு ஆளாக்​கப்​பட்​டுள்​ள​னர்.​

ஈழ பிரச்​னை​யி​லும்,​​ கச்​சத்​தீவு பிரச்​ச​னை​யி​லும் இந்​திய அர​சின் அர​சி​யல் அணு​கு​மு​றை​களை இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி கண்​டிக்​கி​றது.

இந்த அணு​கு​மு​றை​கள் தமி​ழக மக்​க​ளுக்கு விரோ​த​மா​னது மட்​டு​மன்றி,​​ இந்​திய இறை​யாண்​மைக்​கும் எதி​ரா​னது.​ பிரச்​னைக்கு தீர்வு காணத் தவ​றிய தமி​ழக அர​சை​யும் இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி கண்​டிக்​கி​றது.​

ஈழப் போராட்​டம் முடிந்​து​வி​ட​வில்லை.​ ஈழ பிரச்னை தீர இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி இறு​தி​வரை துணை நிற்​கும் என்​றார் நல்​ல​கண்ணு.​

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X