பழ. நெடுமாறன் தம்பி கோமதிநாயகம் சென்னையில் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தம்பியும், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளருமான பழ. கோமதி நாயகம் சென்னையில் மரணமடைந்தார்.
பிரபல நீர்ப்பாசனத்துறை நிபுணர் கோமதி நாயகம். தமிழகத்தின் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை வடிவமைத்து நிறைவேற்றிய பெருமைக்குரியவர்.
தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றியவர்.
நேற்று காலை சென்னை மாம்பாக்கம் சாலையில் உள்ள பார்சன் அபார்ட்மென்ட் இல்லத்தில் கோமதி நாயகம் மரணமடைந்தார். இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
தலைவர்கள் இரங்கல்
கோமதிநாயகம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோமதிநாயகத்தின் பணிகளை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications