விளைச்சல் குறைவு - மல்லிகை பூ விலை 'விர்ர்'...!

மதுரைக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் அதிகளவு மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைகின்ற மல்லி, பிச்சி, கனகாம்பரம், கேந்தி, சம்மங்கி, சேவல், காக்கட்டன், அரளி போன்ற பூங்கள் சங்கரனநாராயணசாமி கோவில் வாளகத்தில் உள்ள கமிஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விலை நிர்ணயம் செயயப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது விளைநிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடியில் தீவிரம் காட்டி வருவதாலும், எப்போதும் இல்லாத வகையில் பனிபொழிவு அதிகமாக இருப்பதாலும் மல்லி, பிச்சி ஆகிய பூ வகைகள் விளைச்சல் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 1 கிலோ மல்லி ரூ.600க்கும், ரூ.800க்கும் விலை போனது. இந்நிலையில் சங்கரன்கோவில் பூ கமிஷன் கடைக்கு மல்லிகை பூ மிக குறைந்த அளவே வந்ததால் 1 கிலோ மல்லிகையின் விலை ரூ.1250க்கு விற்கப்பட்டது. 1 கிலோ பிச்சி பூ ரூ.300 விற்பனை செய்யப்பட்டது.
மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத வகையில் ஏறியதால் மல்லிகை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சில நாட்களுக்கு முன்பே ஆர்டர் வாங்கி இருந்த பூ வியாபாரிகள் கவலை அடைந்ததுடன் பெரும் நஷ்டத்துக்கும் ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications