இலங்கையில் ரயில் பாதை அமைக்கும் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ரயில்வே லைன் அமைக்கிறது இந்தியா. இதற்கான ஒப்பந்தம் கொழும்பில் கையெழுத்தானது.

ஈழப் போர் நடந்த பிரதேசங்களான, ஓமந்தையிலிருந்து பலாலி வரை இந்த ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான IRCON இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் அசோக் கே காந்தா மற்றும் இலங்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் டல்லஸ் அலப்பெருமா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்குப் பகுதியைச் சீரமைக்க இலங்கைக்கு இந்தியா வழங்கும் 425 மில்லியன் டாலர் உதவியின் ஒரு பகுதி இந்த ரயில் பாதை அமைப்புப் பணி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் தெற்குப் பகுதியிலும் இரு ரயில் பாதைகளை அமைத்து வருகிறது இந்தியா, இதில் கொழும்பு - கலுத்தாரா மார்க்க பாதை முடிவடையும் நிலையில் உள்ளது. மற்றொரு பாதை கொழும்பு - மாத்தரா இடையே வேகமாக நடந்து வருகிறது.

'இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்பு முழுமையாக சீராகும் வகையில் இந்தியாவின் உதவி தொடரும். வடக்குப் பகுதியை முழுமையாக சீரமைக்க இந்தியா பாடுபடும், உதவிகள் செய்யும்' என்றார் இந்தியத் தூதர் அசோக் கே காந்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+