அசிங்க அர்ச்சகர் தேவநாதன்-4 பெண்கள் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

Devanathan
காஞ்சீபுரம்: கோவில் கருவறையில் செக்ஸ் வைத்து அசிங்கப்படுத்திய அர்ச்சகர் தேவநாதன் வழக்கில் தொடர்புடைய நான்கு பெண்கள் காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மச்சேஸ்வரர் கோவில் கருவறையை படுக்கை அறையாக மாற்றி அசிங்கப்படுத்தியதாக தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கற்பழிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

அவர் மீது நான்கு பெண்கள் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் இருவர் தங்களை மயக்கி கற்பழித்து விட்டதாக கூறியதால் கற்பழிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

அந்த நான்கு பெண்களும் நேற்று காஞ்சிபுரம் 2வது குற்றவியல் மாஜிஸ்திரேட் காயத்ரி முன்பு ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இது இன் கேமரா எனப்படும் ரகசிய வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டதால் கோர்ட் அறைக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் நான்கு பேரும் வாக்குமூலம் தந்தனர். நான்கு பேரும் தங்களது முகத்தை சேலைத் தலைப்பால் மூடியபடி கோர்ட்டுக்கு வந்தனர். அவர்களை போலீஸார் பாதுகாப்புடன் உள்ளே அழைத்துச் சென்றனர்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய விசாரணை 6.15 மணிக்கு முடிந்தது. ஒவ்வொரும் 45 நிமிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். தேவநாதனிடம் தங்களை பறிகொடுத்தது எப்படி என்பது குறித்து அப்போது விளக்கியதாக தெரிகிறது.

இதைத் தொரடர்ந்து தேவநாதனின் மனைவி கங்கா நீதிபதி முன்பு ஆஜரானார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

அப்போது அவரிடம், உங்கள் கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கோவில் கருவறையில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி தெரியுமா என்று நீதிபதி கேட்டதற்கு, எனக்கு தெரியாது. பத்திரிக்கை செய்தியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அழுதபடி கூறினார் கங்கா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+