திருச்செந்தூர் வள்ளி குகை திடீர் முடல்- பக்தர்கள் அதிர்ச்சி

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் சுப்பிரமணியசாமி கோயிலின் வடக்கு கிரி பிரகாரத்தில் வள்ளி குகை உளளது.
யானை வடிவில் விநாயகர் துரத்திய போது வள்ளி இக்குகையில் ஓளிந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள வள்ளிக்கு தினமும் பூஜைகள் நடத்தப்படும். காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு சாத்தப்படும்.
திருச்செந்தூர் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வள்ளி குகைக்கு சென்று தரிசனம் செய்வார்கள். வழக்கம் போல் நேற்று காலை பக்தர்கள் வள்ளி குகைக்கு சென்றபோது வாசல் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விசாரித்த போது திருச்செந்தூர் வள்ளி குகையில் திரிசுதந்திரர்கள் மணிகண்டன், குமார் ஆகியோர் பூஜைகளை செய்ய 2004ம் ஆண்டு கோயில் இணை ஆணையராக பணியாற்றிய பக்கிரி சாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோயில் சுற்று சன்னதிகளில் சிவச்சாரியார்கள் பூஜை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி சிவச்சாரியார்கள் பூஜை செய்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த ஜனவரி 23ம் தேதி வள்ளி குகையில் சிவச்சாரியார்கள் பூஜை செய்ய இணை ஆணையர் பாஸ்கரன் உத்தரவிட்டார். இதற்கு திரிசுதந்திரர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சிவாச்சாரியர்கள் பூஜை செய்யும்போது பிரச்சனை ஏற்படும் என்று கருதியதால் வள்ளி குகைக்கு பூட்டு போடப்பட்டது.
கோயில் நிர்வாகத்திடம் விசாரித்தபோது சிவாச்சாரியார்கள் பூஜை செய்ய திரிசுதந்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் நடை திறக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications