ஹால்டிராம் உரிமையாளர் மீது கொலை குற்றச்சாட்டு: உறுதி செய்தது கோர்ட்
கோல்கத்தா: டீக்கடைக்காரர் கொலை வழக்கில் ஹால்டிராம் நிறுவனத்தின் உரிமையாளர் பிரபு சங்கர் அகர்வால் மற்றும் 4 பேர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான 'ஹால்டிராம்' உரிமையாளர் பிரபு சங்கருக்கு கோல்கத்தாவில் பூராபஜார் பகுதியில் ஹோட்டல் ஒன்று உள்ளது.
பிரபலமான இந்த 'செயின் ஹோட்டல்' வாசலில் பிரமோத் சர்மா என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். டீக்கடை காலி செய்யுமாறு சர்மாவிடம் பிரபு சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சர்மா கடையை காலி செய்ய மறுத்ததால் கூலிப்படையை ஏவி சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டார் பிரபு சங்கர்.
இதன்படி கோபால் திவாரி, ராஜா சங்கர், மனோஜ் தாக்கூர் மற்றும் அருண் காண்டேல்வெல் ஆகிய நால்வரிடம் பணம் கொடுத்து சர்மாவை தீர்த்துக்கட்ட அனுப்பினார் பிரபு சங்கர்.
கடந்த 2005ம் ஆண்டு மார்ச் மாதம் டீக்கடைக்காரர் சர்மாவை அவரின் வீட்டுக்கே சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு கூலிப்படையினர் தப்பியோடிவிட்டனர்.
குண்டடி பட்டும் உயிர் பிழைத்துக் கொண்ட சர்மா பிரபு சங்கர் மீது வழக்கு தொடர்ந்தார். போலீசார் விசாரணை நடத்தி கூலிப்படையினரை பிடித்தனர்.
கூலிப்படையினர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹால்டிராம் உரிமையாளர் பிரபுசங்கரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோல்கத்தா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்து பிரபு சங்கர் மற்றும் நான்கு பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.
இவர்களுக்கான தண்டனை வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications