நடிகை ரோகிணி கோரிக்கை ஏற்பு - பி.டி கத்திரிக்கு தமிழக அரசு தற்காலிக தடை
சென்னை: நடிகை ரோகிணி தலைமையிலான குழுவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மரபணு மாறறம் செய்யப்பட்ட கத்திரிக்காயை வளர்க்கவோ, விற்கவோ கூடாது என்று தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதிய உணவுப்பயிர்கள் சமீப காலமாக உலகின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை, பூச்சிகளால் அதிகம் தாக்கப்படுவதில்லை என்றும், அதிக மகசூலை தருகின்றன என்று ஒரு கருத்தும் பரவலாக நிலவி வருகிறது.
ஆனால், இயற்கை உணவை ஆதரிப்பவர்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகள், சுகாதாரக் குறைபாட்டை ஏற்படுத்தும், விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் என்றும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.கத்தரிக்காய் ரகத்தை அறிமுகம் செய்வது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் நடிகை ரோகிணி, சினிமாத்துறையினர், டாக்டர்கள், விவசாயிகள், நுகர்வோர், மகளிர் அமைப்பினர் என பலதரப்பினர் இணைந்து உருவாக்கியுள்ள பாதுகாப்புக்கான உணவுக்கான கூட்டமைப்பின் பிரதிநிதிகள், முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்கள்.
தமிழகத்தில் மரபணு மாற்று கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று கோரி மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில், பூவுலகின் நண்பர்கள்' அமைப்புத் தலைவர் டாக்டர் சிவராமன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வம், நிர்வாகி டாக்டர் ஜீவானந்தம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் நடிகை ரோகிணி, சங்கீதா, ராம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழுத் தலைவர் ஷீலு ஆகியோர் சந்தித்து, தமிழ்நாட்டில் மரபணு மாற்று கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் மனுவினை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, அது பற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றும், வேளாண்மைத்துறை அமைச்சர் இது குறித்து சட்டப்பேரவையில் விளக்கமாகக் கூறி உள்ளார் என்றும் சுட்டிக்காட்டியதுடன், எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரையில், இதனை (பி.டி.கத்தரிக்காய்) விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக்கூடாது என்று கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications