ஆந்திரா-கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 40 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

மேற்கு கோதாவரி மாவட்டம் பியபுடேப்பா என்ற கிராமத்தில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.
காலை 6.30 மணியளவில் இக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர் ஒரு நாட்டுப் படகி்ல் கோதாவரி ஆற்றில் பயணித்தனர். அப்போது அந்தப் படகு திடீரென கவிழ்ந்ததில் அனைவரும் நீரில் மூழ்கினர். இதில் 20 மட்டுமே நீந்தி கரை சேர்ந்தனர்.
30 பேரின் உடல்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படகிலிருந்த மற்ற 10 பேரின் நிலை தெரியவி்ல்லை.
அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், காவல் துறையினரும், மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications