மனு கொடுக்க வருவோரிடம் சரமாரி லஞ்சம் - சீவலப்பேரி போலீஸார் கூண்டோடு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: புகார் மனு அளிப்பவர்களிடம் சரமாரியாக லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் சீவலப்பேரி போலீஸ் ஸ்டேஷன் போலீசார் கூண்டோடு வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மாற்றப்பட்டனர்.

சீவலப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிப்பவரிடம் பணம் பெற்றுக் கொண்டு விசாரணை நடத்துவதாக எஸ்ஐக்கள் கோபாலகிருஷ்ணன், தங்கபாண்டியன், முருகன், ஏட்டுகள் கண்ணன், முருகன், அய்யனார், சிவசுப்பு, ஆறுமுகம் ஆகிய 8 பேர் மீது குற்றசாட்டு எழுந்தது.

இதையறிந்த நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் இது குறித்து விசாரணை நடத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தது. இதன் பேரில் எஸ்பி உத்தரவின் பேரில் எஸ்ஐக்கள் கோபால கிருஷ்ணன் சேர்ந்தமரத்திற்கும், தங்கபாண்டியன் வாசுதேவநல்லூருக்கும், முருகன் சொக்கம்பட்டிக்கும், ஏட்டுகள் கண்ணன் புளியங்குடிக்கும், முருகன் சங்கரன்கோவிலுக்கும், அய்யனார் தென்காசிக்கும், சிவசுப்பு கடையநல்லுருக்கும், ஆறுமுகம் பழவூருக்கும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+