அமெரிக்க நிறுவனங்களுக்கு 33 பில்லியன் வரிச்சலுகை! - ஒபாமா அறிவிப்பு!

இதன் மூலம் அமெரிக்காவில் 10 சதவிகித அளவுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா பதவிக்கு வந்து 1 ஆண்டு பூர்த்தியடைந்து விட்டது. இந்த ஒரு ஆண்டு காலத்தில் 60 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மாறாக புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் முயற்சி போதிய வெற்றியை அடையவில்லை.
இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிபிஓ பணிகளைத் தரும் அமெரிக்க கம்பெனிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகைகளை ரத்து செய்துவிட்டார் ஒபாமா. இதனால் அமெரிக்கர்களுக்கு இனி வரும் நாட்களில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் கூடுதல் வரிச் சலுகையாக 33 பில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துள்ளார் ஒபாமா. இதன்படி புதிதாக நியமிக்கப்படும் ஒவ்வொரு பணியாளருக்கும் 5000 டாலர் புதிய சலுகை தருவதோடு, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் சிறு நிறுவனங்கள் தங்களுக்கான வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
'இந்த சலுகை மூலம் அமெரிக்காவை மீண்டும் அதன் பழைய நிலைக்கு கொண்டுவருவதை துரிதப்படுத்துகிறோம்' என்கிறார் ஒபாமா.












Click it and Unblock the Notifications