தமிழகத்தில் இன்னும் 2 வாரத்துக்குப் பனி இருக்கும்
சென்னை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் இரவு நேரப் பனி இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பின் பனிக் காலம் நடந்து வருகிறது. இதன் காரணமாக இரவில் கடும் பனியும், பகலில் கடும் வெயிலுமாக காணப்படுகிறது.
இதனால் சளி, காய்ச்சல் போன்றவை மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி வருகிறது. இந்தப் பனி இன்னும் 2 வாரங்களுக்கு நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை பனிப்பொழிவு மிக மிகக் குறைவாகவே இருந்தது. ஜனவரி 15ம் தேதிக்கு பிறகுதான் பனி அதிகமாக உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
குளிர் காலத்தில் இரவில் தரையின் வெப்பநிலை மிகக்குறைவாக இருக்கும். அதுமட்டுமல்ல வானத்தில் மேகங்களும் இருக்காது. இதனால் தரை இரவில் குளிர்ந்து. அதனால் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
இந்த பனிப்பொழிவு பிப்ரவரி 10ம் தேதி முதல் குறையும். அதிகபட்சம் பிப்ரவரி 14ம் தேதி வரை இருக்கும். அதன்பின்னர் வெயில் தன்மை சற்று அதிகரிக்கும் என்றனர்.
மார்கழியில் மனை குளிரும், தையில் தரையெல்லாம் குளிரும் என்பார்கள். அதற்கேற்ப தற்போது இரவில் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவுக்கு படு குளிராக உள்ளது. இன்னும் 2 வாரங்களுக்கு இது நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் அதற்குப் பிறகு குளிரின் கொட்டம் சற்று அடங்கும் என எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications