புதுச்சேரி பல்கலை மாணவர்களை சந்திக்கும் ராகுல்
புதுச்சேரி: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வரும் 5ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில மணி நேரங்களில் அவர் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்று விடுவார்.
அதற்கு முன்னதாக, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்க ராகுல் திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ராகுல் புதுச்சேரி வந்தபோது பள்ளி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். தற்போது இரண்டாவது வருகையின் போது பல்கலைக் கழக மாணவர்களை ராகுல் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சந்தித்து பேசுவதன் மூலம் ராகுல்காந்தி கல்விக்கூடங்களை அரசியல் கூடாரமாக மாற்றுவதோடு, தனது கட்சியின் பிரச்சாரத்துக்காக அவற்றை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிலையில் ராகுல் மீண்டும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications