சைஃப் அலி கான் ரவுடியாம்!-கூறுகிறார் உத்தவ் தாக்கரே!!

Subscribe to Oneindia Tamil

Saif, Kareena and Uddhav
மும்பை: ஷாருக் கான், ஆமிர் கான் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது சைஃப் அலி கான் மீது பாய்ந்துள்ளது சிவசேனா. சைஃப் அலி கான் ஒரு ரவுடி என்று விமர்சித்துள்ளார் சிவசேனாவின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக கடந்த சில நாட்களாக ஷாருக் கானையும், ஆமிர் கானையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார் பால் தாக்கரே. அக்கட்சியினர் ஷாருக் கானுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, சைஃப் அலி கான் மீது பாய்ந்துள்ளார். அவரை ஒரு ரவுடி என்று காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார்.

இதுகுரித்து அவர் கூறுகையில், பத்மஸ்ரீ விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சைஃப் அலி கான். அவர் ஒரு தபோரி (மும்பையில் ரவுடிகளுக்கு இப்படி ஒரு பெயர் உண்டு). அவர் எப்படி இந்த விருதுக்குப் பொருத்தமானவராக இருக்க முடியும் என்று கூறியுள்ளார் உத்தவ் தாக்கரே.

சைஃப் அலி கானுக்கு பத்மஸ்ரீ விருது தருவதை எதிர்த்து சிவசேனாவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதேபோல பிஷ்னாய் சமுதாயத்தினரும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும் ஜோத்பூரில் சைஃப் அலி கானின் கொடும்பாவியையும் கொளுத்தினர்.

கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற படத்தின் ஷூட்டிங்கின்போது 2 கருப்பு மான்களை சுட்டுக் கொன்றதாக சைஃப் அலி கான் மீது தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவருக்கு பத்மஸ்ரீ விருது தருவது கொடுமையானது என்று அது விமர்சித்துள்ளது.

கடந்த ஆண்டும் சைஃப் அலி கான் சிவசேனாவின் ஆத்திர வலையில் சிக்கினார். அவரும் காதலி கரீனாவும் இணைந்து நடித்த குர்பான் பட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதை எதிர்த்து சிவசேனாவினர் போராட்டம் நடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.

இந்த போஸ்டர்களில் கரீனா தனது முதுகை முழுக்கக் காட்டியபடி போஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தபோரி' என்றால் என்ன...?

கொச்சை இந்தியை பேசியபடி, தெருவில் வம்புச் சண்டை வளர்ப்போர், ரவுடித்தனம் செய்வோரை தபோரி என்று மராத்தியர்கள் அழைப்பது வழக்கம்.

இவர்கள் கொச்சை இந்தியை மட்டுமல்லாமல் தமிழ், குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு பாஷைகளையும் கலந்து பேசுவர்.

ஆட்களை அடிப்பதற்கும், திருடுவதற்கும், மிரட்டுவதற்கும் இவர்களை தாதாக்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். தபோரிகள் என அழைக்கப்படுவோர் பெரும்பாலம் உ.பி., பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

தபோரி என்பது மராத்தி வார்த்தையாகும். இவர்கள் பேசும் இந்திக்கு பம்பையா ஹிந்தி என்றும் ஒரு பெயரிட்டுள்ளனர் மராத்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+