இனி ரயில்களில் பாலியஸ்டர் படுக்கையில் தூங்கலாம்!

ரயில்களில் தற்போது பயன்படுத்தப்படும் பருத்தி இழை படுக்கைகள் சுகாதாரமற்றவையாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதனால் பாலியஸ்டரால் ஆன படுக்கைகளை வழங்க முடிவு செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இத்தகைய படுக்கைகள் இரவு பயண ரயில்களில் முதல் வகுப்பு, குளிர்வசதியுடன் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு வழங்கப்படும் என்று ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
பாலியஸ்டரால் ஆன படுக்கைகளைப் பராமரிப்பது, சுத்தம் செய்வது எளிது. மேலும் இது நீண்ட காலம் உழைக்கும் என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் படுக்கைகள் மாற்றப்படுகின்றன. அதற்குப் பதிலாக ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை படுக்கைகளை மாற்றுமாறும் அந்தந்த கோட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள படுக்கைகளுக்கு மாற்றாக புதிய பாலியஸ்டர் படுக்கைகளை படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications