ஆமை, எலி, பூச்சிகளை விண்வெளிக்கு அனுப்பிய ஈரான்!

ஈரான் அதிபர் முகமது அகமதினிஜாத் கடந்த 3ம் தேதி இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒரு எலி, இரண்டு ஆமைகள் மற்றும் பல்வேறு புழு வகைகளை ராக்கெட்டில் வைத்து அனுப்பியதன் மூலம் ஈரான் ஈடு இணையில்லாத அறிவியல் மைல்கல்லை தொட்டிருப்பதாக ஈரான் அதிபர் பெருமையாக கூறினார்.
விண்வெளிக்கு ஆமை அனுப்பியது ஈரானுக்கு இதுவே முதல் முறை. ஆனால், விண்வெளிக்கு உயிரனங்களை அனுப்புவது ஒன்றும் அறிவியல் துறையில் புதிதல்ல. கடந்த 1961ம் ஆண்டு பிரான்ஸ் முதல்முறையாக எலியை விண்வெளிக்கு அனுப்பியது.
இதைத்தொடர்ந்து சீனா 1964 மற்றும் 65ம் ஆண்டுகளில் சுண்டெலிகளை அனுப்பியது. சோவித் யூனியன் முதல்முறையாக ஆமையை 1968ல் விண்வெளிக்கு அனுப்பியது.
இதன் பின்னர் பல உயிரினங்கள் பல்வேறு நாடுகளின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உயிரியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரான் தனது ஆமைத்திட்டத்தை பெருமையாக அறிவித்திருப்பது ஏன் என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில்,
தனது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சியை ஈரான் அமைதியான முறையில் வெளிப்படுத்துகிறது. மத்திய கிழக்கில் உள்ள போர் முனையங்கள் மீது ஈரான் தனது ராக்கெட்டை செலுத்த முடியும் என்பதை தான் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது' என்றனர்.












Click it and Unblock the Notifications