ஜெ பேச்சு- தமிழகம் முழுவதும் பரப்ப எம்ஜிஆர் இளைஞரணி முடிவு
சென்னை: திமுகவின் 2 ஏக்கர் இலவச நில திட்டம் குறித்து சட்டசபையில் ஜெயலலிதா பேசியதை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அதிமுக இளைஞர் அணி முடிவெடுத்துள்ளது.
அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆதிராஜாராம், இணை செயலாளர் கே.ஏ.கே.முகில், துணை செயலாளர் சரவணபெருமாள், கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜெயலலிதாவின் 62வது பிறந்த நாளை ஏழை எளியோர் நலனுக்கான நல்வாழ்வு நாளாக கொண்டாட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படாதது குறித்து சட்டசபையில் ஜெயலலிதா பேசியதை அனைத்து ஊர்களுக்கும் சென்று விளக்குவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக மாநிலம் முழுவதும் 4,500 தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications