அண்ணா நூலகத்துக்காக ஆயிரம் நூல்கள் வழங்கினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் அண்ணா நூலகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு அரிய புத்தகங்களை சேகரிக்கும் பணியில் சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வீடு வீடாக சென்று புத்தகம் சேகரிக்கும் மாணவர்கள் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து நூல்களை கேட்க திட்டமிட்டனர். அதன்படி சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் தலைமையில் மாணவர்கள் முதல்வரின் இல்லத்துக்கு சென்றனர்.
அப்போது தம்மிடம் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய நூல்களை முதல்வர் கருணாநிதி நூலகத்துக்காக அன்பளிப்பாக வழங்கினார்.












Click it and Unblock the Notifications