ரூ.93 கோடி சொத்து சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி சிக்கினார்!
ராய்ப்பூர்: வருமானத்துக்கு அதிகமாக ரூ.93 கோடி சொத்து சேர்த்த ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பி.எல்.அகர்வால். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 4ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் இவரின் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியானதை அடுத்து சட்டீஸ்கர் அரசு இவரை பணியில் இருந்து நீக்கியது. பின்னர் கடந்த 10ம் தேதி இவர் மீதான வழக்கு பொருளாதார குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1988ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான, இவர் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களின் மதிப்பு ரூ.93 கோடி என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனது உறவினர் மற்றும் பினாமிகளின் பெயர்களில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் இவர், உருக்கு தொழிற்சாலை ஒன்றில் ரூ.60 கோடி முதலீடு செய்துள்ளார்.
அவரின் ஒரு வீட்டிலிருந்து மட்டும், ரொக்கமாக ரூ.68 லட்சம் பணமும், ரூ. 70 லட்சம் மதிப்பிலான நகைகளும், ரூ.8 கோடி மதிப்பிலான முதலீட்டு பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை தவிர பல வங்கி லாக்கர்களில் இவர் மேலும் நகைகள், பத்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை குவித்து வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications