நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயிலில் தீவிபத்து-அசம்பாவிதம் தவிர்ப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சேலத்திற்கு நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. துரிதமாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றுக் கொண்டு சேலம் மேட்டூருக்கு சரக்கு ரயில் சென்றது. இன்று காலை கோவில்பட்டி அருகேயுள்ள குமராபுரம் ரயில்வே கிராசிங்கை கடந்த போது ரயிலின் 28,29வது பெட்டியில் இருந்து புகை வந்தது.
இதை கவனித்த ரயில்வே கேட் கீப்பர் கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். நிலைய அதிகாரி சேதுராமன் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் துரிதமாக ரயில் நிலையம் வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் எறிந்த தீயை அணைத்தனர்.
இதில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலக்கரி சேதம் அடைந்தது. துரிதமாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications