தமிழக உள்துறை செயலாளர் பெயரில் மோசடி செய்தவர் கைது!
மயிலாடுதுறை: தமிழக உள்துறை செயலாளர் மாலதியின் பெயரைப் பயன்படுத்தி, சீர்காழியில் முதியவரிடம் ரூ. 30,000 மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் கொற்கையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (65). இவர், தனது மகளை ஒருவர் கடத்திய வழக்கு தொடர்பாக வக்கீலை சந்திக்க கடந்த சில மாதங்களுக்கு முன் சீர்காழி வந்தார். அப்போது, அவர் புதிய பஸ் நிலையம் அருகே டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த உமாசங்கர், ராமமூர்த்தியிடம் தான் உள்துறை செயலாளர் மாலதியிடம் பணிபுரிவதா கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டதோடு, அவரது மகளை கண்டுபிடித்து தர பேரம் பேசி 30,000 ரூபாயை ராமமூர்த்தியிடமிருந்து பெற்றுள்ளார்.
ஆனால், பணம் கொடுத்து பல நாளாகியும் காணாமல் போன பெண்ணும் வரவில்லை, பணம் வாங்கிச் சென்ற நபரிடமிருந்தும் தகவலும் இல்லை.
இதையடுத்து, ராமமூர்த்தி, உமாசங்கரிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் உமா சங்கர் அவரை அலைகழித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ராமமூர்த்தி சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, மோசடி பேர்வழி உமா சங்கர் மீது இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்கு பதிந்து கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications