நேட்டோ விமானப்படை குண்டு வீச்சில் 33 அப்பாவி மக்கள் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக அப்பாவிகளை நேட்டோ படையினர் கொன்று குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக தீவிரமான போரை தொடுத்துள்ளது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை. இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்காக அதிபர் ஹமீத் கர்சாயிடம் அமெரிக்க கமாண்டர் ஸ்டான்லி மெக்கிறிஸ்டல் வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் மீது நேட்டோ படையினர் ராக்கெட்டை வீசித் தாக்கியதில் அதில் இருந்த அப்பாவி மக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். அப்போதும் தவறுதலாக தாக்கி விட்டோம் என மெக்கிறிஸ்டல் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications