அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வாதாடும் ருத்திரகுமாரன்
Subscribe to Oneindia Tamil

அவர் நாளை நேரில் ஆஜராகி வாதாடவுள்ளதாகத் தெரிகிறது.
மனிதாபிமான உதவிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை தெளிவாக்கும்படி அவர் நீதிமன்றத்தில் வாதிடுவார் என்று இலங்கை தமிழ் இணையத் தளங்கள் தெரிவிக்கின்றன.
யார் தீவிரவாதிகள் என்பதை வரையறுப்பது கடினமானது என்றும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகளை வழங்குவதையும் தீவிரவாதிகளுக்கோ தீவிரவாதத்திற்கோ ஆதரவளிப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்றும் அவர் வாதாட உள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையால் தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்ட இயக்கங்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது அந் நாட்டு சட்டப்படி குற்றமாகும்.
இந்நிலையில், அதுதொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி ருத்திரகுமாரன் வாதாடவுள்ளார் என்று இணையத் தளங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications