பென்னாகரம் இடைத் தேர்தல்: 'டெபாசிட் பயம்'-தேமுதிக புறக்கணிப்பு?

பென்னாகரம் தொகுதிக்கு ஒரு வழியாக வரும் மார்ச் 27ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொகுதிக்கு திமுக சார்பில் இன்பசேகரனும், பாமக சார்பில் தமிழ்குமரனும் நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து இன்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூத்த தலைவர்களான பொன்னையன், தம்பித்துரை, செங்கோட்டையன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஆனால், சமீபத்தில் நடந்த இரு இடைத் தேர்தல்களில் டெபாசிட்டையே இழந்து மிகக் கேவலமாகத் தோல்வியடைந்த தேமுதிக இந்தத் தேர்தலை புறக்கணிக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதே நல்லது என்று கட்சியின் தலைவர் விஜய்காந்திடம் முன்னணித் தலைவர்கள் அறிவுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கட்சியின் சார்பில் பென்னாகரத்தில் போட்டியிட டாக்டர் செந்தில் உள்பட சிலர் விருப்ப மனுவும் செய்துள்ளனர். ஆனால், விஜயகாந்த் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.
இதற்கிடையே பென்னாகரத்தில் பாமக படு வேகமாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. பதிலுக்கு திமுகவும் அமைச்சர் வேலு தலைமையில் பிரச்சாரக் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.
பாமக வேட்பாளர் தமிழ்க்குமரனுக்கு ஆதரவாக அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் இரவு-பகலாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பாமகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் வீடு வீடாக ஏறி இறங்கி வருகின்றனர்.
திமுக சாக்பில் அமைச்சர்கள் பட்டாளமே களத்தில் குதித்துள்ளது.












Click it and Unblock the Notifications