கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா- தமிழர்களுக்கு அனுமதி உண்டா?!
ராமநாதபுரம்: கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருமாறு இலங்கை அரசு அழைப்பு விடுக்காததால் இந்த விழாவில் பங்கேற்ற தமிழர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பது வழக்கம்.
ஆனால், கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் ஏற்பட்டு நடைபெர்று வந்ததால் அங்கு யாரையும் அந் நாட்டு அரசு அனுமதிக்கவில்லை.
உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் கச்சத்தீவு திருவிழாவை நடத்த, இலங்கை அரசு அனுமதியளித்தது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்க, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தாமஸ் சவுந்திரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விழாவுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும், அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை.
இதனால், கச்சத்தீவு செல்பவர்கள் அரசு சார்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐயம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications