கல்பாக்கம் அணு மின் நிலைய விஞ்ஞானியைக் காணவில்லை

Subscribe to Oneindia Tamil

கல்பாக்கம்: சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த அனந்த நாராயணன் என்பவரைக் காணவில்லை.

36 வயதாகும் அனந்தநாராயணன் அங்குள்ள கம்ப்யூட்டர் பிரிவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், 2 மகள்ளும் உள்ளனர்.

அணு மின் நிலைய குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த 15ம் தேதியன்று இரவு 9 மணியாகியும் அனந்த நாராயணன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது அலுவலகத்திற்கு ருக்மணி போன் செய்தார். அப்போது அனந்த நாராயணன் வேலைக்கே வரவில்லை என்ற தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ருக்மணி தனக்குத் தெரிந்த இடங்களில் விசாரித்துள்ளார். ஆனால் ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சதுரங்கப்பட்டணம் போலீஸில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

யாரேனும் அனந்த நாராயணனை கடத்தியிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+