ஆஸி.யில் இந்தியர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது - கிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

S M Krishna
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்திய அரசும், ஆஸ்திரேலிய அரசும், விக்டோரியா மாகாண அரசும் எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக இந்த குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

லோக்சாபவில் இன்று அவராக அளித்த ஒரு விளக்கத்தின்போது, இந்தியர்கள் மீதான தாக்குதல்களில் பல்வேறு காரணிகள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு முதல்தான் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் குறித்துத் தெரிய வந்தது. அப்போது சிட்னியில் சில இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் வரை அதிக அளவிலான இந்தியர்கள் தாக்கப்பட்டனர்.

இந்தப் பிரச்சினையை ஆஸ்திரேலிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன் இதைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தொடர்ந்து இந்திய அரசு வலியுறுத்தி வந்தது.

உயர் மட்ட அளவில் இந்த வலியுறுத்தல் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக தற்போது தாக்குதல் சம்பவங்கள் குறையத் தொடங்கியுள்ளன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+