ஏப்ரல் 9ல் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்: அரசு அறிவிப்பு

மூன்றாம் தலைமுறை தொலைபேசி சேவைக்கான அலைவரிசைக் கற்றை விற்பனை செய்வற்கான ஏலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தாமதமாகி வந்தது.
தொலைத் தொடர்பு, நிதித்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையே இதுதொடர்பான ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த தாமதம் நிலவியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் 3ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் அடுத்த நிதியாண்டில் நிச்சயம் நடக்கும் என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரூ. 35 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ள இந்த 3ஜி ஸ்பெக்டரம் ஏலத்துக்கான தேதி விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாளை (25ம் தேதி) ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து நோட்டீஸ் அனுப்பப்படும்.
வரும் மார்ச் 19ம் தேதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி இதைத்தொடர்ந்து ஏப்ரல் 9ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications