சிங்கப்பூர் இந்து கோயில் நிர்வாகத்தில் முறைகேடு: விசாரணை தீவிரம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோயில் நிர்வாக முறைகேடுகள் குறித்து அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோயில் நிர்வாகத்தை 16 பேர் கொண்ட கமிட்டி கவனித்து வருகிறது. வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தரும் இந்த கோயிலுக்கு 27 லட்சம் சிங்கப்பூர் டாலருக்கும் மேலான மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இக்கோயிலின் 2007ம் ஆண்டு வருமானம் 3 லட்சத்து 50 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்.
இந்நிலையில் இக்கோயிலில் வருமான கணக்கு முறைகேடுகள் நடப்பதாக சமூக மேம்பாட்டுத் துறைக்கு புகார் சென்றது.
இதன் அடிப்படையில் கடந்தாண்டு ஜூலை மாதம் அதிகாரிகள் இக்கோயில் நிர்வாகம் தொடர்பான விசாரணையை தொடங்கினர்.
அறக்கட்டளை விதிகளின் படி சொசைட்டியாக பதிவு செய்ப்பட்ட இக்கோயிலின் வரவு செலவு கணக்குகள் சரிவர கையாளப் படவில்லை என்றும் நிர்வாக சீர்கேடுகள் காணப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தலைமை செயலாளர் எஸ்.நல்லதம்பி தெரிவித்தார்.
இந்நிலையில், கோயில் நிர்வாகிகள் மற்றும் புகார் தொடர்பாக இதுவரை அரசு அதிகாரிகள் சுமார் 2 ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications