பிறந்து 2 நாளே ஆன ஆண் குழந்தை கொன்று கால்வாயில் வீசப்பட்டது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பாளையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாளை கோட்டூர் ரோடு வழியாக பாளையங்கால்வாய் செல்கிறது. இதில் அமலை செடிகளின் நடுவே ஒரு ஆண்குழந்தை பிணம் கிடப்பதாக பாளை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை கிடந்தது.
அதன் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இருந்தது. போலீசார் உடனே குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை தவறான உறவில் பிறந்ததால் கால்வாயில் வீசப்பட்டதா, என்பது பற்றி பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தையின் தாய் யார், அதை வீசி சென்றவர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications