சென்னையில் தேவர் சிலை மீது தாக்குதல்: மனநோயாளி கைது
சென்னை: நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கலச் சிலை சேதப்படுத்தபட்டது. இதுதொடர்பாக மன நோயாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவன தலைவர் ந.சேதுராமன் தேனாம்பேட்டை போலீசில் கொடுத்த புகாரில்,
'சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், சிலரின் தூண்டுதலால் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சிலையை சுற்றி 3 பகுதியிலும் 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு காமிராக்கள் இருந்த நிலையிலும், அந்த சிலையில் பீடத்தில் ஏறி முகத்தை சேதப்படுத்தி இருக்கின்றனர்.
காமிரா இணைப்பை வைத்திருக்கும் காவல் துறைக்கு இந்த சம்பவம் ஏன் தெரியவில்லை? போலீசாரையும் மீறி அரசியல் லாபத்துக்காக திட்டமிட்டு இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இன்னும் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காவிட்டால், நந்தனம் தேவர் சிலைக்கு முன்பாக எங்கள் அமைப்பினர் அறப்போராட்டம் நடத்துவார்கள்' எனக் கூறியிருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மனநோயாளி ஒருவர் சிலையை சேதப்படுத்தியதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications