மதுரை மாநகராட்சியை எதிர்த்து அதிமுகவும் போராட்டம்- தேமுதிகவுடன் போட்டி
சென்னை: மதுரை மாநகராட்சியைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிக அறிவித்துள்ள நிலையில் தற்போது அதிமுகவும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பை பல மடங்கு அதிகரித்துள்ளதை எதிர்த்து தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் அதிமுக சார்பில் மதுரை மாநகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் அறிவித்துள்ளார். ஆனால் போராட்டத்திற்கான காரணம் வேறு.
இதுகுறித்து கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
எனது ஆட்சிக் காலத்தில், மதுரை மக்களின் நலன் கருதியும், பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், வைகை இரண்டாவது குடிநீர்த் திட்டம், புதிய பாலம் அமைக்கும் திட்டம், புதிய மின் விளக்கு அமைக்கும் திட்டம், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் உட்பட பல்வேறு திட்டப் பணிகளை 7 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றும் பொருட்டு ஒரு கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.1,477 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
ஆனால், கடந்த 4 ஆண்டு காலமாக திமுக ஆட்சியில் எந்தப் பணியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
மதுரை மாநகராட்சி பிரசவ மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்ற சூழ்நிலையில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாலும், போதிய அளவு மருந்து, மாத்திரைகள் இல்லாததாலும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றனர். மாநகராட்சி முழுவதும் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
எனவே மதுரை மாநகர மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி திட்டங்களையும், அடிப்படை தேவைகளையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை (புதன்கிழமை) மீனாட்சி பஜார் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் ஜெயலலிதா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், மதுரை மாநகர் மாவட்டக்கழக செயலாளர் செல்லூர் ராஜூ முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஆட்டோவை ரிசர்வ் செய்ய போட்டா போட்டி! Auto ஓனர் காட்டில் மழை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!












Click it and Unblock the Notifications