உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மீக அரங்கம் அமைக்க வேண்டும் - ராம கோபாலன்
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக அரங்கம் அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் தமிழக அரசை வலியுறு்தியுள்ளார்.
இது குறித்து சிவகாசியில் இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
மக்கள் பலர் இன்று ஆன்மீக கடமையாற்றி வருகின்றனர். அந்த உணர்வுகளு்ககு மதிப்பு அளிக்கும் வகையில் , கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், ஆன்மிக அரங்கம் அமைக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி முரை வரவேற்கதக்கது. அரசின் சமச்சீர் கல்வி முறையில் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், நாலடியார் போன்ற நல்வழிப் படுத்தும் நூல்களைச் சேர்க்க வேண்டும்.
வரும் ஜூன் 20 ம் தேதி கரூரில், உரிமை கோரிக்கை மாநாடு நடத்த உள்ளோம்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் பா. ஜ. ஆதரவு கேட்டால் பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications