சேலத்தில் பிரபல ரவுடி பட்டப்பகலில் வெட்டிக்கொலை!
சேலம்: சேலத்தில் பிரபல ரவுடி ரவுடி பட்டப்பகலில், நடுவீதியில் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
சேலம் தாதகாப்பட்டி ஜவஹர் நகரை சேர்ந்தவர் மோகன் (30). ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி.
மோகன் மற்றும் கூட்டாளி சேட்டு ஆகிய இருவரும், மத்திய சிறையில் அடைக்கப்ட்டுள்ள மற்றொரு கூட்டாளியான வளத்திகுமாரை சந்தித்து விட்டு வந்து கொண்டிருந்தனர்.
மத்திய சிறைக்கு அருகே வந்து கொண்டிருந்த போது மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆறு பேர் மோகனை வழிமறித்தனர்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மோகனை சூழ்ந்துகொண்டு, சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
உடல் முழுவதும் படுகாயங்கள் அடைந்த மோகன், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே, ஹெல்மெட் அணிந்த கும்பல் அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்து மோகனின் உடலை கைப்பற்றினர். ரவுடிகள் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications