ஏப்ரலில் ஊதிய உயர்வை அறிவிக்கிறது இன்போசிஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் நம்பர் டூ ஐடி நிறுவனமான இன்போசிஸ், தனது ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வை அறிவிக்கவுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கு ஏப்ரலில் ஊதியம் உயர்த்தப்படுகிதாம்.

கடந்த ஆண்டு பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி நிறுவனம், விப்ரோ ஆகியவை தங்களது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை தள்ளிப் போட்டிருந்தன.

இருப்பினும் கடந்த அக்டோபர் மாதம் இன்போசிஸ் நிறுவனம் ஊதிய உயர்வை அறிவித்தது.

இந்த நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் ரெகுலரான ஊதிய உயர்வை இன்போசிஸ் அறிவிக்கிது. இதுகுறித்து இன்போசிஸ் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வை அறிவிக்க பரிசீலித்து வருவது உண்மைதான். வருகிற ஆண்டில் பிசினஸ் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். எனவே ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்.

நிறுவனத்தின் அனைத்து மட்டத்திலும் ஊதிய உயர்வு இருக்கும். எந்த அளவுக்கு உயர்த்துவது என்பது ஏப்ரல் மாதம் முடிவு செய்யப்படும் என்றார்.

இருப்பினும் 8 முதல் 12 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+