சந்தன மரம்-புலித் தோல்: நித்தியானந்தா மீது கர்நாடக வனத்துறை வழக்கு!

நித்தியானந்தா விவகாரம் இன்று கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது. அவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் ஆச்சார்யா பதிலளிக்கையில், நித்தியானந்த சாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் அவருடைய தலைமை மடம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. எனவே தமிழகத்திலிருந்து போதிய தகவல்கள் திரட்டப்பட்ட பின்னர் நித்தியானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசுகையில், நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும். அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.
பெங்களூர் அருகே உள்ள பிடுதியில் நித்தியானந்தாவின் தலைமை தியான பீடம் உள்ளது. அங்கு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் இன்று இந்த தியா பீடத்தில், கர்நாடக வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நித்தியானந்தம் முறைகேடாக ஏராளமான சந்தன மரங்களை தனது ஆசிரமத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா பயன்படுத்திய புலித் தோலையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், நித்தியானந்தா உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications