Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாரி வாடகை உயர்வு-அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்!

Subscribe to Oneindia Tamil

Lorry
சென்னை: டீசல் விலையேற்றம் காரணமாக தமிழகத்தில் லாரி வாடகை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விரைவில் உயரும் என தெரிகிறது.

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ. 2.80 கூடுதலாகி இருப்பதால், ஆட்டோக்கள், லாரிகள், ஆம்னி பஸ்கள் என பல வாடகை வாகனங்களும் கட்டணத்தை அதிகரித்து வருகின்றனர்.

குறிப்பாக டிப்பர் லாரி உட்பட சரக்கு போக்குவரத்துக்கு பயன்படும் லாரிகளின் வாடகை 20 சதவீதம் உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

'ஜனவரி மாதம் லாரியின் 4 டயர்கள் விலை ரூ.52 ஆயிரமாக இருந்தது. அவை இப்போது ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்துடன் லாரிக்கான ஆயில் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. டீசலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கணக்கிட்டு கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியிருப்பதாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தினமும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் பெங்களூர், வேலூர், ஆந்திரா, திருச்சி, ஆரணி முதலிய இடங்களில் இருந்து காய்கறிகள் மலை போல வந்து இறங்குகின்றன.

அதுபோல திருச்சி, கோவை, மதுரை, நெல்லை முதலிய இடங்களுக்கும் வெகு தூரத்தில் இருந்து அந்த பகுதிகளில் கிடைக்காத காய்கறிகள், வெங்காயம் முதலியவை வருகின்றன.

அரிசியும் இப்படி தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆங்காங்கே வெளியிடங்களில் இருந்து வருகிறது.

இந்நிலையில், லாரி வாடகை அதிகரித்திருப்பதால், காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+