தூத்துக்குடி: மலேசியாவுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள், பவளப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட அரியவகை கடல் அட்டைகள், பவளப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதில் பதப்படுத்தப்பட்ட ஆயிரத்து 50 கடல் அட்டைகளையும், 100 கிலோ பவளப்பாறைகளையும் அவர்கள் கைப்பற்றினர்.
விசாரணையில் இவை தூத்துக்குடியில் இருந்து கொச்சி வழியாக மலேசியாவுக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதில் தொடர்புடைய வீட்டு உரிமையாளர் ராமலிங்கம், திரேஸ்புரத்தை சேர்ந்த அண்டோ, ஷேக் மைதீன், அண்ணா காலனி ஜாபர், மற்றும் ஆர்வி புரம் சம்சுதீன், ஆகியோர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய திரேஸ்புரத்தை சேர்ந்த அப்துல்காதர், பீர் ஆகியோரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை, பவளப்பாறைகளின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications