மக்கள் டிவி அலுவலக தாக்குதலில் எங்களுக்குத் தொடர்பில்லை - ஜி.ராமகிருஷ்ணன்

நேற்று மாலை செய்தியாளர்களிடம் ராமகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
கட்சியின் மூத்த தலைவர் டபிள்யூ.ஆர்.வரதராஜனை கட்சியிலுள்ள ஒரு குழுவே அவரை கொலை செய்திருக்க கூடும் என்று மக்கள் டி.வி.யில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து மக்கள் டி.வி.யின் ஆசிரியரை நேரில் சந்தித்து ஆட்சேபனை தெரிவிக்க கட்சி நிர்வாகிகள் சென்றனர். அப்போது, எங்கள் கட்சியினரை தொலைக்காட்சி நிறுவனத்தை சார்ந்தவர்கள் தாக்கினர். இதில், பாலன் என்பவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
அந்த சமயத்தில் மக்கள் டி.வி. அலுவலகம் மீது நடந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இந்த நிலையில், பா.ம.க.வை சேர்ந்த 50 பேர் கட்சி அலுவலகத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அலுவலகத்தை தாக்கிய பா.ம.க.வினர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராமகிருஷ்ணன்.
99 பேர் கைது...
நேற்று நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு சம்பவங்கள் தொடர்பாக மாம்பலம் போலீசாரும், நுங்கம்பாக்கம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிபிஎம் தரப்பில் முக்கிய நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பீமாராவ், சண்முகம், ஆகியோர் உள்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ம.க. கவுன்சிலர் வெங்கடேசன் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னொரு பா.ம.க. கவுன்சிலர் பிரகாஷ் உள்பட சிலரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications