பென்னாகரம் இடைத் தேர்தலை நடத்தப் போகும் 3 பெண் அதிகாரிகள்
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தலை நடத்தும் பொறுப்பு மூன்று பெண் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 3ம் தேதி தொடங்கியது.
இடைத் தேர்தலை மூன்று பெண் அதிகாரிகள் நடத்தவிருக்கின்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதா, பென்னாகரம் தொகுதி தேர்தல் அதிகாரியும், ஆர்டிஓவுமான மகேஷ்வரி ரவிக்குமார், டி.எஸ்.பி. பஞ்சவர்ண் ஆகியோரே அவர்கள்.
3 அதிகாரிகளும் இணைந்து அனைத்துத் துறையினரின் ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 பார்வையாளர்கள் நியமனம்...
இதற்கிடையே, இடைத்தேர்தல் பணிகளை கண்காணிக்க 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
அவர்களில் ஒருவர் சஞ்சய்போஸ் ரெட்டி. இவர் லக்னோவில் உத்தரபிரதேச அரசின் வருவாய் வாரிய நீதியியல் உறுப்பினராக உள்ளார்.
மற்றொரு தேர்தல் பார்வையாளராக டி.பி.அகூஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போபாலில் மத்திய பிரதேச அரசின் வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டத்தில், திட்ட இயக்குனராக உள்ளார்.
இரு அதிகாரிகளும் 30ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பணியில் இருப்பார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications