8 முன்னணி நிறுவனங்களுக்கு ஒருவாரத்தில் ரூ.31 ஆயிரம் கோடி லாபம்

Subscribe to Oneindia Tamil

Reliance Industries Limited
மும்பை: இந்தியாவின் 8 முன்னணி நிறுவனங்கள், மார்ச் 6ம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு தங்களின் பங்குகள் மதிப்பை உயர்த்தியுள்ளன.

இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தை வகிக்கிறது. மும்பை பங்குச் சந்தையில் மிகவும் வலுவான இடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மொத்த லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை அள்ளிச் சென்றுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.10 ஆயிரத்து 448 கோடி உயர்ந்துள்ளது.

இதன் மூலம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 274.86 கோடியாக ரிலையன்ஸ் மதிப்பு அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல் கடந்த வாரத்தில் தனது சந்தை மதிப்பீட்டு அளவை ரூ.7 ஆயிரத்து 328.71 கோடி உயர்த்தியுள்ளது. நிறுவனத்தின் இப்போதைய மொத்த மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 327.20 கோடி!

எனினும் இதற்கு முன்பு வரை முன்னணியில் இருந்து வந்த ஓஎன்ஜிசி, கடந்த வாரம் ரூ.4 ஆயிரத்து 726.9 கோடி சரிவை சந்தித்து மொத்த சந்தை மதிப்பில் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 195.57 கோடியாக இறங்குமுகம் கண்டுள்ளது.

என்டிபிசி நிறுவனம் ஐந்தாம் இடத்தில் இருந்து தற்போது மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த வாரத்தில் என்டிபிசி நிறுவனத்தின் மதிப்பு ரூ.2ஆயிரத்து 308.73 கோடி அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+