Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோமாலியா கடல் கொள்ளையர் 35 பேர் கைது-பிரான்ஸ் கடற் படை அதிரடி

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: சோமாலியா கடல் பகுதியில் நடந்த 48 மணி நேர அதிரடி தேடுதல் வேட்டையில் கடல் கொள்ளையர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டதாக பிரெஞ்சு ராணுவ அமைச்சகம் அறிவித்தது.

சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடந்த பல காலமாக உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகின்றனர்.

சர்வதேச கடல்சார் நிறுவனம், சர்வதேச உணவு திட்ட நிறுவனம் போன்றவை கடல் கொள்ளையரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அடிக்கடி கவலை தெரிவித்து வந்தன.

சோமாலிய கடல் வழியே வரும் சரக்கு கப்பல்களை கடத்திச் செல்லும் இந்த கொள்ளையர்கள், கணிசமான பணத்தை கேட்டு பேரம் பேசுவதுண்டு.

பேரம் படியாமல் போகும் போது கப்பலை நாசப்படுத்தியும், கப்பலில் உள்ளவர்களை கொன்றும் சூறையாடி வந்தனர்.

இவர்களை ஒடுக்க ஐரோப்பிய யூனியன் கடந்த 2008ம் ஆண்டு அட்லாண்டா மிஷன் என்ற அமைப்பை உருவாக்கியது.

கடல் பகுதியில் தொடர் ரோந்து பணியில் இப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை அமைப்பும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிரான்ஸ் கப்பற்படையினர் சோமாலியா கொள்ளையர்களை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினார்கள்.

அப்போது கப்பலை கடத்த முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டதாக பிரெஞ்ச் ராணுவ அமைச்சக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளையர்களுக்கு சொந்தமான 4 பெரிய கப்பல்கள் மற்றும் ஏராளமான படகுகளையும் ஆயுதங்களையும் பிரெஞ்ச் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களால் கடத்தப்பட்ட 4 பெரிய கப்பல்கள், 6 சிறிய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவலை பிரான்சு கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+