சீன தூதரகத்திற்குள் நுழைய முயற்சி செய்த 27 திபெத்தியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில், சீனத் தூதரகத்திற்குள் நுழைய முயற்சி செய்து போராட்டத்தில் ஈடுபட்ட 27 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
திபெத்தியில் புரட்சி வெடித்ததன் 51வது ஆண்டு தினத்தையொட்டி இன்று சீனத் தூதரகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர் திபெத்தியர்கள்.
சாணக்கியபுரி பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் திடீரென சீனத் தூதரகத்தை நோக்கி ஓடத் தொடங்கினர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் 27 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications