இந்தி தேசியமொழி அல்ல-ராஜ் தாக்கரே
மும்பை: இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அதனை மற்ற மொழிகளைப் பேசுவோர் மீது திணிக்கக் கூடாது என்று மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் சகோதர் மகனான ராஜ்தாக்கரே சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து வந்து தனியாக மஹாராஷ்டிரா நவநிர்மான் என்ற அமைப்பை தொடங்கி நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன.
ஆண்டுவிழாவை ஒட்டி மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்தாக்கரே பேசுகையில்,
'எம்என்எஸ் அமைப்புக்கு நான்கு வயதாகி விட்டது. நாங்கள் இன்னும் மராத்தி மொழிக்கான கொள்கையை சமரசப்படுத்திக் கொள்ளவில்லை.
மற்ற மொழி பேசுவோர் மீது இந்தி மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்தி ஒன்றும் இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழி. அவ்வளவே.
மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சியை நான் தொடங்கும் முன்னர், என் பின்னால் இத்தனை பேர் வருவார்களா என்று பலமுறை தயங்கினேன். ஆனால் என்னால், இந்த அமைப்பால் சாதிக்க முடிந்தது என்றால், அது தொண்டர்களின் பலத்துக்கு அடுத்தபடியாக மீடியாவின் கவனிப்பால் தான் சாத்தியமானது.
நாங்கள் நடத்தும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்தையும், போராட்டத்தையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் தவறாமல் செய்தியாக்கி வெளியிட்டன.
இதன் மூலமே எங்களுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி சாத்தியமானது என்பதை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்.
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
இந்த சட்டத்தை எதிர்க்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் முதல்வர் பதவியில் இருந்து தான் விலகியவுடன் அப்பதவியில் தனது மனைவியை அமர்த்தினார்.
அப்படிப்பட்ட லாலு பெண்களுக்கான ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் அர்த்தமில்லை' என்று தாக்ரே பேசியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications