பெங்களூர் வந்த விமானத்தில் வெடிகுண்டு பீதி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால் பெங்களூர் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இண்டிகோ பயணிகள் விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டது.

புறப்பட்ட சில மணி நேரம் கழித்து, பெங்களூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு டெல்லி விமான நிலைய போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை தகவல் வந்தது.

பெங்களூர் வந்து சேரும் விமானத்தில் வெடிகுண்டு இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்று பகல் 12.30 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையகத்திற்கு சம்பந்தப்பட்ட விமானம் வந்து சேர்ந்த உடனடியாக அதில் இருந்த பயணிகள் 150 பேரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பயணிகளை முழு சோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தினர். விமானத்தை தனி இடத்திற்கு கொண்டுசென்று வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் 'சல்லடை போட்டு' அலசினர்.

ஆனால், வெடிகுண்டு மற்றும் ஆபத்தான பொருட்கள் எதுவும் விமானத்தில் இல்லை என காவல்துறை இணை ஆணையர் பசவராஜ் மலகட்டி தெரிவித்தார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+