இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவு 7!

Subscribe to Oneindia Tamil

Indonesia
ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்கு தீவுப் பகுதிகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 என பதிவாகியிருந்தாக இந்தோனேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு இந்தோனேசியாவின் வடமலுகு மாகாணத்தில், ஜகார்தா நேரப்படி இன்று காலை 7.57 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

ஜகார்தாவில் இருந்து வடக்கு-கிழக்கே 2 ஆயிரத்து 430 கிமீ தொலைவை மையமாகக் கொண்டு 56 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. பூகம்பத்தால் சேதாரங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

இதற்கிடையே, இமாச்சலப் பிரதேசம் - பஞ்சாப் எல்லைப் பகுதியிலும் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.6 என பதிவான இந்த நிலநடுக்கம் முதலில் அந்தமான நிகோபார் தீவுப் பகுதியில் இன்று காலை 8.13 மணிக்கு உணரப்பட்டது.

இதையடுத்து பகல் 12.23 மணிக்கு இமாச்சலப் பிரதேசம் - பஞ்சாப் எல்லை பகுதிகளில் அதிர்வுகள் ஏற்பட்டன.

பஞ்சாபின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹோஷியாப்பூரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பூகம்பவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த பூகம்பத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+