காங் கோஷ்டி மோதல் - ஜிகேவாசன் ஆதரவாளர் அலுவலகம் சூறை
சென்னை: இளைஞர் காங்கிரஸ் தேர்தலை ஒட்டி ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சென்னையில் ஜி.கே.வாசன் ஆதரவாளரின் அலுவலகம் இன்று சூறையாடப்பட்டது.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் தேசிய அளவில் நடந்து வருகின்றன. வட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் தேர்தல்கள் நடந்து முடிந்தன.
தமிழகத்தில் முதல் கட்டமாக உள்ளாட்சி அமைப்பு ரீதியில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதற்காக தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உறுப்பினர் அடையாள அட்டை உள்ளவர்கள் வாக்குச் சீட்டில் முத்திரையிட்டு ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.
முன்னதாக இந்த தேர்தலின் போது குமரி மாவட்டம் உள்பட சில பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் 2வது கட்ட தேர்தல் இளைஞர் காங்கிரஸ் சட்ட மன்ற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெறவுள்ளது.
வரும் 19ம் தேதி இத்தேர்தல் தொடங்குகிறது. 30ம் தேதிக்குள் இந்த தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் 10ம் தேதி மாநில அளவிலான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு லட்சத்து ஆயிரம் பேர் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் காரணமாக ஜி.கே.வாசன் ஆதரவாளர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.
அமைந்தகரை பகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு மோதல் ஏற்பட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் கதிரவன் அலுவலகம் இன்று அதிகாலை 3 மணிக்கு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
இன்று காலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அலுவலகத்தை தாக்கி விட்டு தப்பிவிட்டதாக, அமைந்தகரை காவல்நிலையத்தில் கதிரவன் புகார் அளித்துள்ளார். தாக்குதல் நடத்தியது மாநில தலைவர் தங்கபாலு கோஷ்டியினர் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடும் தன்னை மிரட்டும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கதிரவன் தெரிவித்திருக்கிறார்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications